பிள்ளையான் போன்று கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும்
கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய திட்டமொன்றை செயற்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 100 பேர் வரை கைது புதிதாக செய்யப்பட்டுள்ளார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்னரும் பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டமைக்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் வாடுகின்றனர். கடந்த வருடத்தில் மாத்திரம் 100ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுதலை செய்ய ஏதாவது செய்யுங்கள். கடந்த காலத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய திட்டம் ஒன்றை செயற்படுத்துவோம்.
எனினும் ஒரு வருடத்திற்குள் கைதானவர்களுக்கு பிணை வழங்குங்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான அரசாங்கத்திற்கு சார்பான பிள்ளையானுக்கும் பிணை கிடைத்தது.
அதேபோல் இவர்களையும் விடுதலை செய்யுங்கள். கடந்த வாரத்தில் பிரதீபன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பிணையல்ல, அவரை விடுதலை செய்யுங்கள். இதற்கு சரியான தீர்வு ஒன்றை வழங்குங்கள்.
ஜனநாயக போராளிகள் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக்கில் பதிவிட்டது தவறல்லவே? என கேள்வியெழுப்பியுள்ளார்.