தமிழர் தலைநகரில் சண்டித்தனம் காட்ட இடமளியோம்: சம்பந்தன் திட்டவட்டம்
தமிழர் தலைநகரான திருகோணமலையில் பௌத்த விகாரைகளை நிறுவவும், மேலும் சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவும் பேரினவாதம் முயற்சிக்கின்றது.
அவர்களின் இந்தச் சண்டித்தனத்துக்கு நாம் ஒருபோதும் இடமளியோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பௌத்த விகாரைகள் எதற்கு
"வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம். எமது தாயகத்தின் தலைநகர் திருகோணமலை. இங்கு தமிழர்களை ஒதுக்க அல்லது இல்லாதொழிக்கச் சிங்கள - பௌத்த அடிப்படைவாதிகள் பெரிய நிகழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்து வருகின்றனர்.
அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழர்கள் பெருமளவில் வாழும் இடங்களில் பௌத்த விகாரைகள் எதற்கு?

விடுதலைப் புலிகளின் தலைவர் வாழ்ந்த இடத்தின் இப்போதைய நிலவரம்: யுத்தத்தின் போது கூட இல்லாத நிலை(Photos)
சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்கள் எதற்கு? இந்த அடாவடிச் செயற்பாடுகளை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்." என தெரிவித்துள்ளார்.





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
