இறுதி நேரத்தில் ஜெய்சங்கருடனான சந்திப்பில் பங்கேற்காத சம்பந்தன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் (R. Sampanthan) திடீர் சுகயீனம் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான சந்திப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று (20.06.2024) மாலை 5 மணியளவில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் முக்கியஸ்தர்களைச் சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் தலைவர்கள் எட்டுப்பேர் உள்ளடங்கிய பேராளர்களுடன் சிறந்த சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இச்சந்திப்பில் இணைந்துகொண்டமைக்காக திருவாளர்கள் @ShanakiyanR, @Mavai_S, @MASumanthiran, @ImShritharan, @SAdaikalanathan, தர்மலிங்கம்… https://t.co/Ke7toqUHJm
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 20, 2024
திடீர் சுகயீனம்
இதனடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் தலைவர்கள் எட்டுப்பேருடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, வடக்கு - கிழக்கு நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்படட்டுள்ளது.
இந்நிலையில், மேற்படி சந்திப்பில் இரா.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
You May Like This,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
