குளியாப்பிட்டிய நகரசபை நிர்வாகம் தொடர்பான கலந்துரையாடலில் அடிதடி!
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஆட்சியமைக்கவுள்ள குளியாப்பிட்டிய நகர சபை நிர்வாகம் தொடர்பான கலந்துரையாடல் அடிதடியில் முடிந்துள்ளது.
குளியாப்பிட்டிய நகர சபை தலைவர் மற்றும் உபதலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு நேற்று நடைபெற்றுள்ளது.
இதற்கிடையே நகர சபை நிர்வாகத்தை இணைந்து கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், நேற்றைய தினம் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
தாக்குதல்
இதன்போது காமினி கருணாரத்தின என்பவரை நகரசபைத் தலைவராக நியமிப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் மஞ்சுள புத்திக என்பவர் தனக்கும் நகர சபைத் தலைவர் பதவி தரப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் நகர சபைத் தலைவருக்கான வேட்பாளர் காமினி கருணாரத்தின உள்ளிட்ட பலர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக குறித்த கூட்டம் எதுவித தீர்மானங்களும் இன்றி நிறைவடைந்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர்களான அனுர யாப்பா, அகில விராஜ் காரியவசம், உபாலி பியசோம, நளின் பண்டார உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri
