சஜித் மீது திஸ்ஸ அதிருப்தி! கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டுமாம்
நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் மறுசீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் தற்போதைய பலமான அரசுடன் அரசியல் ரீதியில் மோதுவதென்பது பெரும் சவாலாகவே அமையும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake) தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன மறுசீரமைக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கை விரைவில் இடம்பெறவேண்டும்.
சவாலாக அமையும்
இதனை வலியுறுத்தும் வகையிலேயே கடந்த தேர்தல் முடிவுகள் அமைந்தன. எனவே, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மாற்றம் இடம்பெறவேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறப்படுகின்றது. அவ்வாறு நடக்க வேண்டும் என நானும் வலியுறுத்துகின்றேன்.
புதிய மாற்றமொன்றை நாம் மக்களுக்கு காட்டியாக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தற்போதுள்ள அரசுடன் அரசியல் சமரில் வெல்வது சவாலாக அமையும்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டணி உடைவதை நாம் விரும்பவில்லை. அதனால்தான் கலந்துரையாடல் மூலம் தேசியப்பட்டியல் பிரச்சினையைத் தீர்த்தோம் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
