சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: நீதிமன்றத்தை நாட நடவடிக்கை
தேயிலை உற்பத்திக்கான அதிக செலவு காரணமாக தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க முடியாது என தோட்ட முதலாளிமார் சங்கம் தெரிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 30 ஆம் திகதி இரவு முதல் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேயிலைத் தோட்டக் கம்பனிகளுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் முக்கிய கலந்துரையாடல்
கொழும்பில் (02) திகதி தேயிலைத் தோட்டக் கம்பனிகளின் உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொட்டகலையில் இடம்பெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam