பிரதமராக பதவியேற்க தயார் என கோட்டாபயவுக்கு கடிதம் அனுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்- ஜனாதிபதி

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sajith Premadasa Mujibur Rahman
By Steephen Nov 24, 2022 09:25 AM GMT
Report

மூன்று அச்சங்கள் என்பது மரிக்கார் அச்சம், ரோசி அச்சம் மற்றும் ஹிருணிகா அச்சம் என்பன அல்ல எனவும் மக்கள் கூட்டத்திற்கே நோய் அச்சம், மரண அச்சம், அமானுஷ்ய அச்சம் என்று மூன்று அச்சங்கள் ஏற்படும் எனவும் தனிநபருக்கு அப்படியான அச்சங்கள் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மூன்று அச்சங்கள் சனக்கூட்டத்திற்கே ஏற்படும்

Ranil Wickramasinghe-ரணில் விக்ரமசிங்க

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மூன்று அச்சங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதற்கு இன்று பதிலளித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முஜிபுர் ரஹ்மான், ஜனாதிபதிக்கு மூன்று அச்சங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மூன்று அச்சங்கள் ஒரு நபருக்கு ஏற்படாது ஒரு சனக்கூட்டத்திற்கே மூன்று அச்சங்கள் ஏற்படும். விசால மாநகரின் மக்களுக்கே மூன்று அச்சங்கள் ஏற்பட்டன.

நோய் அச்சம், மரண அச்சம் மற்றும் அமானுஷ்ய அச்சங்கள் சனக்கூட்டத்திற்கு ஏற்படலாம். அந்த விடயத்தை தெளிவுப்படுத்திக்கொள்ள ரதன சூத்திரத்தை கேளுங்கள் என ஜனாதிபதி, முஜிபுர் ரஹ்மானுக்கு கூறியுள்ளார்.

பிரதமர் பதவியை ஏற்பதாக கோட்டாபயவுக்கு கடிதம் அனுப்பிய சஜித் 

Ranil Wickramasinghe-ரணில் விக்ரமசிங்க

அதேவேளை நான் ஒருபோதும் பிரதமர் பதவியை கோரவில்லை. எனினும் தற்போது என்னை விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் பதவியை வழங்குமாறு அன்றைய ஜனாதிபதி கோடடாபய ராஜபக்சவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் பிரதமர் பதவியை கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அன்று கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிய கடிதத்தை அவையில் தாக்கல் செய்வதாகவும் அதனை அவை குறிப்பில் சேர்க்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

நான் பிரதமர் பதவியை கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். நான் பிரதமர் பதவியை கோரவில்லை. என்னை அழைத்து வழங்கினர். மாநாயக்க தேரர்கள் உட்பட பலர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினர்.

Ranil Wickramasinghe-ரணில் விக்ரமசிங்க

நான் கேட்கவில்லை.கடிதம் அனுப்பவில்லை. எனினும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியதை எதிர்க்கட்சித் தலைவர் மறந்து விட்டார் என நினைக்கின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி அவையில் வாசித்தார்.

“ கௌரவ ஜனாதிபதி அவர்களே. எதிர்க்கட்சியின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான ஏனைய கட்சிகளுடன் இணைந்து குறுகிய கால அரசாங்கத்தை அமைக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் பதவியை ஏற்பது என தீர்மானித்துள்ளேன்” என எதிர்க்கட்சித் தலைவர், கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி இருந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

ஏன் என்னை திட்டுகிறீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் கடிதத்தை அனுப்பும் போது நான் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து விட்டேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US