அரசாங்கத்துக்கு சஜித் தரப்பு விடுத்துள்ள வேண்டுகோள்
அரசியல்வாதிகள் குற்றவாளிகளாக இருந்தாலும், முறையான வழிமுறையின்படி அவர்கள் கைது செய்யப்படாவிட்டால், வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (31.01.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“வரலாற்றில் செய்யப்பட்ட தவறுகளிலிருந்து புதிய அரசாங்கம் சில விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் .
பொலிஸ் பாதுகாப்பு
கூடுதலாக, தற்போதைய அரசாங்கம் பொலிஸ் பாதுகாப்பு பெற தேவையற்றவர்களுக்கும் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
பல்வேறு நபர்கள் பல்வேறு வழிகளில் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர்.இது தேவையற்ற விடயம்
மேலும், ஒரு உண்மையான குற்றவாளி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டாலும், அவர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் அரசாங்கம் பாதுகாப்பு மற்றும் அதை வழங்குவது குறித்து ஒரு வெளிப்படையான கொள்கையை பின்பற்றப்பட வேண்டும்” என்றார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |