ஊடகவியலாளர்களே ஊடக சட்டமூலத்தை உருவாக்க வேண்டும்: சஜித் வலியுறுத்து
ஊடக ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவொன்றே உருவாக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் முன்வைத்துள்ள ஊடக ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் நேற்றைய தினம் (21.06.2023) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
ஊடக ஒழுங்குமுறை
ஊடக ஒழுங்குமுறைக் கொள்கைகளை உருவாக்குவது வெகுஜன ஊடகத் துறைக்கே வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, இந்த நாட்டில் ஊடகங்களை ஒடுக்குவதற்கு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எந்த தேவையும் இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலம் அல்லது ஊடக ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் சார்பில் மரிக்கார் எம்.பி. மற்றும் டலஸ் அழகப்பெரும எம்.பி. ஆகியோரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்
புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்
அடுத்துவரும் 3 நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan