நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க சஜித் கட்சி முடிவு: மனோ, ஹக்கீம், ரிஷாத் அணிகள் பங்கேற்பு
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணிப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இடம்பெறவுள்ளது.

அமர்வை புறக்கணிப்பு
அத்துடன் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையும் குறித்த அமர்வை புறக்கணிக்கவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்தாலும் அதன் பங்காளிக் கட்சிகளான ஶ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் என்பன பங்கேற்கவுள்ளன.
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam