பல அரசியல்வாதிகளால் மறுக்கப்பட்டுள்ள பதவி வாய்ப்பு:காரணம் என்ன..!-செய்திகளின் தொகுப்பு
முன்னதாக சஜித் பிரேமதாச, மைத்திரிபால மற்றும் பல அரசியல்வாதிகளுக்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்புகள் விடுக்கப்பட்டள்ளன.ஆனால் அவர்கள் அனைவரும் சவாலை ஏற்க மறுத்து விட்டனர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும், கட்சி இரண்டாவதாக இருக்க வேண்டும். இத்தருணத்தில் பொருளாதாரத்தையும் நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எம்மால் எடுக்கப்பட்ட கூட்டுத் தீர்மானமாகும்.
முன்னதாக சஜித் பிரேமதாச, மைத்திரிபால மற்றும் பல அரசியல்வாதிகளுக்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்புகள் விடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அனைவரும் சவாலை ஏற்க மறுத்து விட்டனர்.”என கூறியுள்ளார்.