விசேட தேவை கொண்டவர்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ள சஜித்தின் 3 வீதக்கொள்கை
ஐக்கிய மக்கள் சக்தி (SJB), கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விசேட தேவை கொண்ட சமூகத்தை வலுவூட்டுவதற்கான தனது கொள்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் 1.6 மில்லியன் அங்கவீனமுற்ற பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa ) இதன்போது அறிவித்துள்ளார்.
தேசிய கொள்கையின் அவசியம்
இந்த விடயத்தில் ஒரு விரிவான தேசிய கொள்கையின் அவசியத்தை வலியுறுத்திய பிரேமதாச, விசேட தேவையுடையவர்களுக்கு 3வீத வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தவும், கொடுப்பனவுகளை அதிகரிக்கவும், அத்தியாவசிய உபகரணங்களுக்கான வரிகளை நீக்கவும் உறுதியளித்துள்ளார்.

அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் கல்வித் திட்டங்களுடன், காப்புறுதி தொகை மற்றும் வங்கிக் கடன்களுக்கான அணுகலை எளிதாக்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri