எலோன் மஸ்க்கை குறிவைக்கும் சஜித்! - அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை
உலகின் முதல்தர செல்வந்தரான எலோன் மஸ்க்கின் டெஸ்லா மின்சார கார் தொழிற்சாலையை இலங்கையில் திறப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அது முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், எலோன் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த வாய்ப்பைப் பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தனது தந்தை இருந்திருந்தால் அதை செய்திருப்பார் என்று கூறிய அவர், நாடு மோசமான நிலையில் இருந்த போது தனது தந்தை 200 ஆடைத் தொழிற்சாலைகளைத் தொடங்கினார் என்றும் அவர் கூறினார்.