சாகலரத்நாயக்க மாத்தறையில் இருந்து கொழும்புக்கு மாற்றம்
கொழும்பு மேற்கு தொகுதிக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளராக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.தே.க.வின் கொழும்பு மேற்கு தொகுதிக் கூட்டம் கொழும்பு கிருலப்பனையில் நடைபெற்றிருந்தது.
அங்கு சபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவில் ஜனாதிபதி அலுவலக பணியாளர் குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, தொகுதியின் புதிய பிரதான அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.
புதிய நிர்வாக சபை நிர்வாகிகள் தெரிவு
அத்துடன் மேற்கு கொழும்பு மற்றும் கிழக்கு கொழும்பு ஆகிய இரு தொகுதிகளுக்கான சபைக் கூட்டம் கிருலப்பனையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை அலுவலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றதுடன், புதிய நிர்வாக சபை நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது.
முன்னதாக சாகல ரத்நாயக்க, மாத்தறை தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 15 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
