2009 இறுதி யுத்தத்தில் வயது வித்தியாசமின்றி களையப்பட்ட உடைகள்! நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஆதங்கம் (Video)
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பிபிசியின் அப்போதைய செய்தியாளராக இருந்த பிரான்சிஸ் ஹாரிசன், ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்ற நூலில் பதிவிட்டுள்ள விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நினைவுபடுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (23.05.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “முட்கம்பி அடித்த வேலிக்குள் செம்மறி ஆடுகளைப் போல் மக்களை அடைத்தார்கள். அவர்களின் உடைகளை எல்லாம் கழற்ற வைத்தார்கள். வயது பால் வித்தியாசம் இன்றி எல்லோரும் பச்சைக் குழந்தைகள் கூட தங்கள் உடைகளை களைய வேண்டும்” என பிரான்சிஸ் ஹரிசன் குறித்த நூலில் குறிப்பிட்டுள்ளதாக சிறீதரன் சபையில் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |