நாட்டை பற்றி சிந்தித்து ரணிலை ஆதரிப்போம்: மொட்டுக் கட்சியினர்
நாடு பற்றி சிந்தித்து புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ. தொலவத்தை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அரசியல் செய்யாது, நாடு பற்றி சிந்தித்து, புதிய பிரதமருக்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். எப்படியான அரசியல் பிரச்சினைகள் இருந்தாலும் நாட்டை பொருளாதார பிரச்சினையில் இருந்து மீட்க நாம் புதிய பிரதமருக்கு உதவ வேண்டும்.
நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்பட்டாலும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்விலேயே புதிய பிரதமருக்கு உதவ நான் நடவடிக்கை எடுப்பேன்.
ரணில் விக்ரமசிங்க செய்த விடயங்கள் தொடர்பில் எதிர்ப்புகள் இருந்தாலும் தற்போதைய சந்தர்ப்பத்தில் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தொலவத்த கூறியுள்ளார்.
அதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நியாயமான காலத்தை வழங்க வேண்டும் என ஸ்ரீங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு வெளிநாடுகளுடன் தொடர்புகளை கொண்டு டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எமக்கு தெரியும். நாட்டின் தற்போதைய நிலைமையில் அப்படியான உதவிகள் கிடைத்தால் நல்லது.
அவ்வாறான நலன்களையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ரணில் விக்ரமசிங்கவுக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவோம். இது பிரதமர்களை நியமித்து, நியமித்து பதவியில் இருந்து விலக்கும் நேரமல்லது.
ரணிலுக்கு காலத்தை வழங்கி பார்ப்போம், அவர் சரியில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து விரட்டுவோம் எனவும் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு போட்ட இமான்! குழந்தைகள் பாஸ்போர்ட் சர்ச்சை பற்றி அதிர்ச்சி தகவல் Cineulagam

KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு- என்னமா சொல்லியிருக்கிறார் பாருங்க Cineulagam

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam

சனி வக்ர பெயர்ச்சியால் அடுத்த18 நாட்களில் இந்த 3 ராசிக்கும் வரப்போகும் போராபத்து....சனியால் அழிவு நிச்சயம்! Manithan

நாட்டின் ஜனாதிபதி புடினையே முதுகில் குத்திய ரஷ்யா! உக்ரைன் போரில் திருப்புமுனை உறுதி... முக்கிய தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022