இலங்கையில் உயிரிழந்த ரஷ்ய பெண்! ரஷ்ய தூதரகம் வெளியிட்ட தகவல்
காலி உணவட்டுன மஹாரம்ப ரயல் கடவையில் ரயில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், அவரது நான்கு வயது மகள் நேற்றிரவு வரை முன்பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உணவட்டுன பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரஷ்ய பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
ரஷ்ய தூதரகம் வெளியிட்ட தகவல்
இந்த நிலையில், பிள்ளையை முன்பள்ளியில் விட்டு, விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது ரஷ்ய பெண்ணை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி மீது ரயில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் டயரியா என்ற ரஷ்ய பெண்ணும் கிந்தொட்ட பரணவிதான சரத் நாணயக்கார என்ற ஹபுகல பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ரஷ்ய தூதரகத்தின் ஊடாக ரஷ்ய பெண்ணின் உறவினர்களை கண்டறிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, ரஷ்யாவில் இருந்து குழந்தையின் தந்தை இலங்கைக்கு, நாளை அல்லது நாளை மறுதினம் வரவுள்ளார் என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
காலி, ஹபராதுவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் மகளை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வராத நிலையில் குழந்தை பராமரிப்பு இல்லம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.
தாயின் மரணம் மற்றும் சிறுமியின் நிலை குறித்து தாம் ஏற்கனவே ரஷ்யாவிற்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் நிலையத் தளபதி தெரிவித்தார்.
நேற்று, ரஷ்ய பெண் தனது நான்கு வயது மகளை முன்பள்ளியில் இறக்கிவிட்டு திரும்பும் போது இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தை சந்தித்துள்ளார்.
நேற்று காலை வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் ரஷ்ய பெண் ஒருவரும் அதன் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டநிலையில், ரஸ்யாவில் இருந்து குழந்தையின் தந்தை இலங்கைக்கு, நாளை அல்லது நாளை மறுதினம் வரவுள்ளார் என்று ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.