மனித வரலாற்றில் முதன் முதலில் ரஷ்ய பயங்கரவாத அரசு செய்த கொடூரம்! கொந்தளித்த ஜெலென்ஸ்கி
உக்ரைனின் அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நினைவு கூர்ந்துள்ளார்.
உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா நகரை இலக்காகக் கொண்டு,ரஷ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.
இவ்வாறு ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குடியிருப்புகளில் வசித்த 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ரஷ்யாவின் தாக்குதல்
இந்நிலையில் உக்ரைனின் அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி,இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவில்,“ரஷ்யாவை பயங்கரவாத நாடு என குறிப்பிட்டுள்ளார்.
'ZNPP மீதான எங்களின் முழு கட்டுப்பாட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
அதேபோன்று அணுமின் நிலையம் தொடர்பில் ரஷ்யா மீது உலகளவில் தடைகள் விதிக்க வேண்டும்.
கொள்கை ரீதியான பதில்
மேலும் ரஷ்யாவின் பயங்கரவாத வடிவத்திற்கு உலகில் இருந்து, குறிப்பாக கொள்கை ரீதியான பதில் தேவைப்படுகிறது. பாதுகாப்பை மீட்டெடுக்க எங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக சர்வதேச அணுசக்தி நிறுவனத்திற்கு நன்றி என கூறியுள்ளார்.
அத்துடன் ஒரு வருடத்திற்கு முன்பு, மனித வரலாற்றில் முதன் முதலில் பயங்கரவாத அரசு ஒரு அணுமின் நிலையத்தை பணயக் கைதியாக பிடித்தது. ஜபோரிஜியா NPP, ரஷ்யா ஆலை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
அது அணுமின் நிலையத்தில் மறைந்திருக்கும் எங்கள் நகரங்களை மோசமாக தாக்கியது மற்றும் ZNPP-யின் பிரதேசத்தை ஒரு நடைமுறை ராணுவ பயிற்சி மைதானமாக மாற்றியது.”என குற்றம்சாட்டியுள்ளார்.

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
