மனித வரலாற்றில் முதன் முதலில் ரஷ்ய பயங்கரவாத அரசு செய்த கொடூரம்! கொந்தளித்த ஜெலென்ஸ்கி
உக்ரைனின் அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நினைவு கூர்ந்துள்ளார்.
உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா நகரை இலக்காகக் கொண்டு,ரஷ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.
இவ்வாறு ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குடியிருப்புகளில் வசித்த 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ரஷ்யாவின் தாக்குதல்
இந்நிலையில் உக்ரைனின் அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி,இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவில்,“ரஷ்யாவை பயங்கரவாத நாடு என குறிப்பிட்டுள்ளார்.
'ZNPP மீதான எங்களின் முழு கட்டுப்பாட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
அதேபோன்று அணுமின் நிலையம் தொடர்பில் ரஷ்யா மீது உலகளவில் தடைகள் விதிக்க வேண்டும்.

கொள்கை ரீதியான பதில்
மேலும் ரஷ்யாவின் பயங்கரவாத வடிவத்திற்கு உலகில் இருந்து, குறிப்பாக கொள்கை ரீதியான பதில் தேவைப்படுகிறது. பாதுகாப்பை மீட்டெடுக்க எங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக சர்வதேச அணுசக்தி நிறுவனத்திற்கு நன்றி என கூறியுள்ளார்.
அத்துடன் ஒரு வருடத்திற்கு முன்பு, மனித வரலாற்றில் முதன் முதலில் பயங்கரவாத அரசு ஒரு அணுமின் நிலையத்தை பணயக் கைதியாக பிடித்தது. ஜபோரிஜியா NPP, ரஷ்யா ஆலை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.

அது அணுமின் நிலையத்தில் மறைந்திருக்கும் எங்கள் நகரங்களை மோசமாக தாக்கியது மற்றும் ZNPP-யின் பிரதேசத்தை ஒரு நடைமுறை ராணுவ பயிற்சி மைதானமாக மாற்றியது.”என குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam