மூன்று ஆண்டுகள் கழித்து ரஷ்ய உளவு திமிங்கலத்தால் எழுந்துள்ள அச்சம்
2019 ஆம் ஆண்டில் நோர்வே கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ரஷ்ய 'உளவு' திமிங்கலம் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியிருந்தது.
தற்போது இந்த ரஷ்ய 'உளவு' திமிங்கலம் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் சுவீடன் கடற்கரையின் மேற்பரப்பில் சுற்றித்திரிவதாக அச்சம் எழுந்துள்ளது.
ரஷ்ய உளவு திமிங்கலம்
"ஹ்வால்டிமிர்" என்ற புனைப்பெயர் கொண்ட இந்த திமிங்கலம், முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதில் ஒளிப்பட கருவி பொறுத்தக்கூடிய சேணம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சேணத்தில் Equipment St Petersburg என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்ததால், இந்த திமிங்கலம் ஒரு ரஷ்ய உளவாளி என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால், திமிங்கலத்தை உளவாளியாக பயன்படுத்துவதாக ரஷ்யா ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை.
அதேநேரம், வெளிவரும் செய்திகளுக்கு எந்த அதிகாரப்பூர்வ எதிர்வினையையும் வெளியிடவில்லை.
கடல் உயிரியலாளர்களின் கருத்து
இந்நிலையில் சுவீடன் கடற்கரையின் மேற்பரப்புக்கு வந்த ரஷ்ய 'உளவு' திமிங்கலத்தை கடல் உயிரியலாளர்கள் கண்டுள்ளனர்.
இது தொடர்பில் கடல் உயிரியலாளர்கள் கூறுகையில்,“சுவீடனின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள ஹன்னெபோஸ்ட்ராண்டில் அந்த திமிங்கலம் சுற்றித் திரிவதைக் கண்டோம். ஆனால் அது வேகமாக சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.
மேலும் அது ஏன் இப்போது அவ்வளவு வேகமாகச் சென்றது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றும், அது ஹார்மோன் மாற்றத்தல் ஒரு துணையை தேடிக்கொண்டிருக்கலாம்." என தெரிவித்துள்ளனர்.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
