இந்தியா வருகை தர மறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் சீனா செல்ல திட்டம்
ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை ரஷ்ய ஜனாதிபதி நிராகரித்த நிலையில் சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
சீனாவில் பெல்ட் அண்ட் ரோடு மாநாடு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து புடினை போர்க்குற்றவாளியாக அறிவித்து அவரை கைது செய்ய சர்வதேச நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் ரஷ்யாவை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எல்லை கட்டுப்பாடு
இந்நிலையில், முதன்முறையாக அவர் இந்தக் கட்டுப்பாட்டை கடந்து சீனாவுக்கு செல்ல புடின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை புடின் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் ஷி ஜின்பிங் மாஸ்கோ பயணம் மேற்கொண்டதும் இரு தலைவர்களும் தங்கள் தோழமைக்கு எந்த வித எல்லையும் இல்லை என்று அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
