மீண்டும் தீவிரமடையும் போர் பதற்றம்! உக்ரைன் எல்லை அருகே அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானங்கள்
ரஷ்ய படையை சேர்ந்த 2 போர் விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதாக ரஷ்யா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தீவிரமடைந்த நிலையில், இரு தரப்பும் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் எல்லையையொட்டியுள்ள தெற்கு ரஷ்ய பிராந்தியத்தின் பிரையன்ஸ்க் பகுதியில் இரண்டு எம்.ஐ.-8 ரஷ்ய ஹெலிகாப்டர்கள், சு-35 போர் விமானம் மற்றும் சு-34 போர் விமானம் ஆகியவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தரப்பு வெளியிட்ட தகவல்
இந்த நிலையில், உக்ரைனில் சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதுடன், உக்ரைன் இராணுவமும் ரஷ்ய படைகளை எதிர்த்து கடுமையாக போரிட்டு வருகின்றது.
இது குறித்து தெற்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா பகுதியின் அதிகாரியான விளாடிமிர் ரோகோவ் தெரிவித்துள்ளதாவது,
நான்கு ரஷ்ய விமானங்கள் வானத்தில் இருந்து சுடப்பட்டுள்ளதுடன்,ஹெலிகாப்டர்கள் மற்றும் சு-34 விமானத்தில் இருந்த வீரர்கள் உயிரிழந்துள்ளமையை உக்ரைன் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
