புடினின் இரகசியங்களை அறிந்தவர் மர்மமான முறையில் திடீர் மரணம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய இரகசியங்கள் பல அறிந்த இராணுவ தளபதி மர்மமான முறையில் திடீரென்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளாடிமிர் புடினுக்கு சொந்தமான 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அரண்மனை தொடர்பிலான இரகசியங்களைம் அறிந்த இராணுவ தளபதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவினை சேர்ந்த 69 வயதான ஜெனடி லோபிரேவ் என்ற இராணுவ தளபதியே சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
முறைகேடு, சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 2017ல் 10 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |