ரஷ்ய எரிபொருள் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து! 35 பேர் பலி
ரஷ்யாவின் தெற்கு பகுதியில் டகிஸ்டன் மாகாண எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
எரிபொருள் நிலையம் அருகே கார் பழுதுபார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து எரிபொருள் நிலையத்தில் பரவியுள்ளது.
இந்த வெடிவிபத்தில் 3 குழந்தைகள் உட்பட 35 பேர் உயிரிழந்துள்ளதுடன்,115 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |