ரஸ்யாவிற்கு பதிலடி கொடுக்க தயார்! - அமெரிக்க ஜனாதிபதி கடும் எச்சரிக்கை (VIDEO)
உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் அச்சம் இன்னும் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் ஆரம்பித்தால், அதன் காரணமாக ஏற்படப்போகும் மனித சேதங்கள் மிகப்பெரியதாக இருக்கும் என்று அவர் நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ரஸ்யாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்கா தீர்க்கமாக பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
உக்ரைன் எல்லையில் ரஸ்யா தற்போது சுமார் 150,000 துருப்புக்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.
ரஸ்யா, நேற்று தமது படைப்பிரிவுகள் சிலவற்றை உக்ரைன் எல்லையில் இருந்து திரும்பப்பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பைடன் குறிப்பிட்டார்.
எனினும் அவர்கள் அச்சுறுத்தும் நிலையில் இன்னும் இருப்பதாக தமது ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் என்று பைடன் தெரிவித்தார்.
உக்ரைன் விடயத்தில் மொஸ்கோவின் கரிசனைகள் தீவிரமாக பரிசீலிக்கப்படவேண்டும் என்று ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறிய சில மணிநேரங்களுக்குப் பின்னர் பைடனின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan