ரஸ்யாவிற்கு பதிலடி கொடுக்க தயார்! - அமெரிக்க ஜனாதிபதி கடும் எச்சரிக்கை (VIDEO)
உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் அச்சம் இன்னும் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் ஆரம்பித்தால், அதன் காரணமாக ஏற்படப்போகும் மனித சேதங்கள் மிகப்பெரியதாக இருக்கும் என்று அவர் நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ரஸ்யாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்கா தீர்க்கமாக பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
உக்ரைன் எல்லையில் ரஸ்யா தற்போது சுமார் 150,000 துருப்புக்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.
ரஸ்யா, நேற்று தமது படைப்பிரிவுகள் சிலவற்றை உக்ரைன் எல்லையில் இருந்து திரும்பப்பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பைடன் குறிப்பிட்டார்.
எனினும் அவர்கள் அச்சுறுத்தும் நிலையில் இன்னும் இருப்பதாக தமது ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் என்று பைடன் தெரிவித்தார்.
உக்ரைன் விடயத்தில் மொஸ்கோவின் கரிசனைகள் தீவிரமாக பரிசீலிக்கப்படவேண்டும் என்று ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறிய சில மணிநேரங்களுக்குப் பின்னர் பைடனின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam