உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் - 5 பேர் பலி
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் இன்று 542 ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நேற்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், இந்த டிரோனை மாஸ்கோவில் நிறுவப்பட்டுள்ள வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது.
இந்நிலையில், டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் மீது ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் செர்னிகிவ் நகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |