ஒரே இரவில் உக்ரைனின் பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
உக்ரைனின் 77 ட்ரோன்கள் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட போதிலும், ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் எல்லையான மேற்கு பிரையன்ஸ்க் பகுதியில் 30 ட்ரோன்களும் கலுகா பகுதியில் 25 ட்ரோன்களும் மேலும் குர்ஸ்க், வோரோனேஜ், ரோஸ்டோவ் மற்றும் பெல்கோரோட் பகுதியில் ஏனைய ட்ரோன்கள் என மொத்தம் 77 ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளாகும் நகரங்கள்
முன்னதாக, மொஸ்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 90இற்கும் மேற்பட்ட ட்ரோன்களை செவ்வாயன்று வீழ்த்தியதாக கூறப்பட்டது.
இதற்கிடையில், பல உக்ரேனிய நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan
