எந்த நேரத்திலும் உக்ரைனை தாக்கத் தயாராக இருக்கும் ரஷ்யா: மேற்கத்திய உளவுத்துறை தெரிவிப்பு - செய்திகளின் தொகுப்பு(Video)
உக்ரைன் எல்லையில் எந்த நேரத்திலும் பல தாக்குதல்களை நடத்தவும், கியேவைக் கைப்பற்றவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தாக்க முடிவு செய்தால், உக்ரைனின் தலைநகர் கீவை (Kiev) முக்கிய இலக்காக வைத்து உக்ரைனின் எல்லையில் பல தாக்குதல்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகளின் கூறுகின்றனர்.
ரஷ்யப் படைகளைக் கட்டியெழுப்புவதும் ஆயுதங்களையும் பீரங்கிகளை விநியோகிப்பதும் படையெடுப்பைத் தவிர வேறு எதற்காகவும் இருக்க முடியாது என்று மேற்கத்திய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,