தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படும் நாய்கள்: ரஷ்யாவின் இரகசிய திட்டம் அம்பலம்
உக்ரைனின் டாங்கிகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யாவின் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை தற்கொலை குண்டுதாரிகளாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதலில் கடந்த சில மாதங்களாகவே ரஷ்ய படைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், ரஷ்யாவின் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து டாங்கிகளை வெடிக்க செய்யும் பயிற்சியை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என ஓரியோலில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் விக்டர் மகரோவ் முன்மொழிந்துள்ளார்.
இருப்பினும் தற்கொலை குண்டுதாரியாக ரஷ்ய நாய்களை பயிற்றுவிப்பதில் உள்ள பல்வேறு தளவாடச் சிக்கல்களை கருத்தில் கொண்டு மகரோவின் சகாக்கள் அவரது யோசனையில் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நாய்களுக்கான நிதிச்செலவு
நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும் வேளையில் நாய்களை உயிருடன் வைத்திருப்பதற்கான நிதிச் செலவுகள் குறித்து உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில், இந்த திட்டத்தை சட்டசபை நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி புடினின் சிறப்பு இராணுவ நடவடிக்கை நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் இதனை தடுத்து நிறுத்த, 2023 இல் பாதுகாப்பு செலவினங்களை கணிசமாக அதிகரிக்கும் திட்டங்களை ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு அறிவித்துள்ளார்.
அத்துடன் "ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையின் போக்கில் அவற்றின் அடுத்தடுத்த பயன்பாட்டுடன் நவீனமயமாக்கல் மற்றும் நம்பிக்கைக்குரிய அமைப்புகளை உருவாக்குவது அவசியம்" என்று ஷோய்கு தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இராணுவ செலவினங்கள் கிட்டத்தட்ட 150% அதிகரிக்க திட்டம் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam