ரஷ்யாவின் யுத்த குற்றங்கள் தொடர்பில் உக்ரைன் வெளியிட்டுள்ள தகவல்
ரஷ்ய இராணுவம், மற்றைய பகுதிகளை விட்டுச் சென்றது போன்றே கெர்ஷனிலும் யுத்த குற்றங்களை செய்துள்ளது என உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைனின் கெர்ஷன் பகுதியில் விட்டுச் சென்ற 400க்கும் அதிகமான மறைக்கப்படாத யுத்த குற்றங்கள் விசாரணை அதிகாரிகளிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைக்கப்படாத யுத்த குற்றங்கள்
கெர்ஷன் பகுதியில் ரஷ்ய படையினர் வெளியேறிய பின்னர், அங்கு பொதுமக்கள் மற்றும் படையினரின் சடலம் காணப்பட்டதாக வொலோடிமீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிகாரிகள் கெர்ஷன் நகருக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், பயணத் தடையையும் விதித்துள்ளனர்.
குற்றவாளிகள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்
ரஷ்ய இராணுவம், மற்றைய பகுதிகளை விட்டுச் சென்றது போன்றே கெர்ஷனிலும் யுத்த குற்றங்களை செய்துள்ளது. எந்தவொரு சந்தேகமும் இன்றி குற்றவாளிகள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து புச்சா, இஸியம் மற்றும் மரியபோல் ஆகிய நகரங்களில் இருந்து மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
