உக்ரைன் தலைநகர் கிவ் மீது எறிகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா-உலக செய்திகள்
உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா மீண்டும் பல எறிகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 வயது சிறுமி உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யா கிவ் நகரின் மீது ஆரம்பத்தில் தாக்குதல்களை நடத்தியிருந்தது. எனினும், உக்ரைன் துருப்பினரின் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ரஷ்யா அதிலிருந்து பின்வாங்கியதுடன், பின்னர் நகரின் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த நகரை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதேவேளை, ஜெர்மனியில் ஜீ-7 நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான மாநாடு இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தி கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
ரஷ்யாவுக்கு மேலும் பொருளாதார தடைகளை விதிப்பதற்கு இந்த மாநாட்டின் போது இணக்கம் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகள்
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam