ரஷ்யா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் இன்றையதினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குரில் தீவில் 6.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
142 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின என்றும் இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெருவில் நிலநடுக்கம்
இதேவேளை, பெரு நாட்டின் சான் ஃபெர்ணான்டோவில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மக்கா பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவு கோளில் இந்த நிலநடுக்கம் 5.3ஆக பதிவாகி இருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
