மக்களுக்கு முன் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஆட்சியாளர்கள்
தமக்கு முன்னர் நாடே முதன்மையானது என மார்த்தட்டி கொண்ட சில ஆட்சியாளர்கள், கோவிட் 19 தடுப்பூசியை பொது மக்களுக்கு வழங்கும் முன்னர் தாம் செலுத்திக்கொண்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தெஹிவளையில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சியின் நடமாடும் சேவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் கோவிட் 19 தடுப்பூசியை செலுத்திக்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமது பாதுகாப்பை மாத்திரம் சிந்தித்து செயற்படுவதற்கு பதிலாக முழு நாட்டு மக்களை கோவிட் 19 வைரசிடமிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam