ருஹுணு கல்வியியற்கல்லூரி மாணவர்கள் 54 பேர் வெளியேற்றம்
சக மாணவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட கல்விக்கல்லூரி மாணவர்கள் 54 பேர் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ருஹுணு கல்வியியற் கல்லூரியில் கடந்த மாதம் 26ம் திகதி வைபவம் ஒன்றின் போது மாணவர்களுக்கு இடையில் மோதல் வெடித்திருந்தது.
இந்த சம்பவத்தில் 12 மாணவர்கள் கடுமையாக காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கை
இதனையடுத்து கல்வி அமைச்சின் உதவிச்செயலாளர் ஒருவர் தலைமையிலான குழுவொன்று சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளில் வன்முறைக்குக் காரணமானவர்களாக அடையாளம் காணப்பட்ட 54 மாணவர்கள் கல்வியியற் கல்லூரியை விட்டும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.அவர்களின் மாணவர் அனுமதியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை அறிக்கையின் பேரில் அவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
May you like this Video