பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் ரஸ்யாவில் கைது
நாட்டின் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் ரொட்டும்பே அமில எனப்படும் அமில சம்பத்என்பவர் ரஸ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொட்டம்பே அமில, திட்டமிட்ட அடிப்படையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு பிரிவு, இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்கு தொடர்பாக, இன்டர்போல் ஊடாக அவருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட "ரொட்டும்பே அமில", நாடு கடத்தல் சட்டம் (Extradition Law) கீழ் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

Tamizha Tamizha: சனிப்பெயர்ச்சி 2025... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்! குழப்பத்தில் தொகுப்பாளர் Manithan
