மகனை பார்க்க ஏங்கிய தாயிடம் சேர்க்கப்படவுள்ள உயிரற்ற உடல்: உலகத் தமிழர்களுக்கு முக்கிய கடிதம்
சிறையல்ல சிறப்புமுகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பது போகப் போகத்தான் விளங்கியது என ராஜீவ் காந்தி வழக்கில் சிக்குண்ட ஏழு தமிழர்களில் ஒருவரான இராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து இன்றைய தினம் (29.02.2024) உலகத் தமிழர்களுக்கு எழுதியுள்ள முக்கிய கடிதத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயது முதிர்ச்சியடைந்து கடைசியாக ஒருமுறையாவது தனது மகனை பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத் தான் கொண்டு போய் சேர்க்கப் போகிறோம்.
கடைசியாக தனது கையால் தன் மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்த தாய் அந்த மகனுக்கு கடைசியாக வாய்க்கரிசி கொடுக்கத்தான் வாய்க்கப்பட்டிருக்கிறார் என ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.


சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் Cineulagam