ஊடகவியலாளர் போன்று நடித்த திருட்டு சந்தேக நபர் கைது

Ampara Crime Law and Order
By Farook Sihan Sep 13, 2025 08:30 AM GMT
Farook Sihan

Farook Sihan

in குற்றம்
Report

ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்த திருட்டு சந்தேக நபரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(12) உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மைதானத்தில் வைத்து முன்னெடுக்கபட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல ஆடையகம் ஒன்றில் கடந்த நோன்பு காலத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

காலில் காயத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தலையில் ஏற்பட்ட காயத்தால் மரணம்

காலில் காயத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தலையில் ஏற்பட்ட காயத்தால் மரணம்

விசாரணை

குறித்த திருட்டு தொடர்பில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் உரிய ஆடையகத்தின் உரிமையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு அளித்திருந்தார்.

இதற்கமைய பொலிஸாரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

ஊடகவியலாளர் போன்று நடித்த திருட்டு சந்தேக நபர் கைது | Robbery Suspect Posing As Journalist Arrested

இந்நிலையில் குறித்த பிரபல ஆடையகத்தில் உடுதுணி கொள்வனவில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட குடும்பமும் மற்றுமொரு வழியில் தாங்கள் கொள்வனவு செய்த பொருட்களுக்கான பணத்தினை செலுத்தியிருந்தது.

பின்னர் குறித்த விடயம் தொடர்பில் தனது வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட களங்கம் தொடர்பில் தனது கடையில் பொருத்தி இருந்த பாதுகாப்பு கமராவினை ஆராய்ந்த உரிமையாளர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பணியாளரை இனங்கண்டு கொண்டார்.

அத்துடன் பொலிஸாருக்கும் அறிவித்ததுடன் அச்சந்தேக நபரின் பிறந்த இடமான காத்தான்குடி பகுதி மற்றும் சந்தேக நபர் திருமணம் செய்திருந்த அட்டாளைச்சேனை பகுதிக்கும் சென்று பொலிஸார் குறித்த சந்தேக நபரை விசாரித்து தேடியுள்ளனர்.

இரு வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்

இரு வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்

கைது

எனினும் தன்னை கைது செய்ய பொலிஸார் வருவதை அறிந்த குறித்த சந்தேக நபர் தனது அடையாளத்தை உருமறைப்பு செய்து ஊடகவியலாளர் போன்று பாவனை செய்து சுமார் 7 மாதங்களாக தலைமைறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வெள்ளிக்கிழமை(12) மின்னொளி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது.

ஊடகவியலாளர் போன்று நடித்த திருட்டு சந்தேக நபர் கைது | Robbery Suspect Posing As Journalist Arrested

இந்நிலையில் குறித்த போட்டியை அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மைதானத்தினுள் சென்று செய்தி சேகரிக்க ஏற்பாட்டாளர்களால் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்ட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தான் குறித்த திருட்டு சந்தேக நபரும் தன்னை ஒரு ஊடகவியலாளர் போன்று உருமாற்றி மைதானத்தினுள் சென்று ஏனைய ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்ததுடன் அவர்களை அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த போட்டியிற்கு அதிதியாக வருகை தந்திருந்த பிரபல ஆடையக உரிமையாளரும் மேற்படி விடயத்தை அவதானித்ததுடன் தனது கடையில் மேற்கொள்ளப்பட்ட திருட்டுடன் சம்பந்தப்பட்ட நபர் என்பதையும் அடையாளம் கண்டு கொண்டார்.

யாழில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

யாழில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

சட்ட நடவடிக்கை

உடனடியாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்த நிலையில் அங்கு வந்த சாய்ந்தமருது பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்த பிரபல ஆடையகத்தில் பணியாற்றி வந்துள்ளதுடன் ஒரு தொகை பணத்தை வாடிக்கையாளரின் பையில் இருந்து திருடியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

ஊடகவியலாளர் போன்று நடித்த திருட்டு சந்தேக நபர் கைது | Robbery Suspect Posing As Journalist Arrested

இவர் 37 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் என்பதுடன் சுமார் 7 மாதங்களாக ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்து வந்த நிலையில் மைதானத்தினுள் சென்று ஏனைய ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்து அவர்களை அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொண்டிருந்த நிலையில் கைதானமை சுட்டிக்காட்டதக்கது.

மேலும் சந்தேக நபரை சட்ட நடவடிக்கைகாக கல்முனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சாய்ந்தமருது பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெலிகம நகர சபைத் தலைவருக்கு பிடியாணை

வெலிகம நகர சபைத் தலைவருக்கு பிடியாணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US