துமிந்தவின் துப்பாக்கியும் சேமசிங்கவின் வீட்டில் தங்க ஆபரணங்களும் கொள்ளை
கடந்த 9 ஆம் திகதி முன்னாள் ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் வட மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் எச்.பீ. சேமசிங்க ஆகியோரின் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மத்தியில் அவர்களுக்கு சொந்தமான பொருட்கள் காணாமல் போயுள்ளதாக அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த பதிவு செய்யப்பட்ட 9 எம்.எம். கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரர் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்கவின் தந்தையான எச்.பீ. சேமசிங்கவின் வீட்டில் இருந்த 60 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சேமசிங்க முறைப்பாடு செய்துள்ளார்.
தனது மனைவிக்கு சொந்தமான இந்த தங்க ஆபரணங்களின் பெறுமதி ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் எனவும் சேமசிங்க தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.