கொழும்பில் ஆயுதமுனையில் மிரட்டி ஒன்றரை கோடி ரூபா கொள்ளை!
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhayani
கொழும்பு - பொரலஸ்கமுவ, கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சந்தேகநபர்களால் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு கூரிய கத்தியுடன் நுழைந்த சந்தேகநபர்கள் பணிப்பெண்ணை பயமுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இதன்போது சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட மூவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும், 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US