தியானத்தில் இருந்த பௌத்த தேரருக்கு நேர்ந்த கதி
அம்பாறை - பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள மகா விகாரையின் பௌத்த தேரர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து பணம் மற்றும் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் சிலரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட எட்டுச் சந்தேக நபர்களும் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 34, 40, 39, 34, 38, 43 மற்றும் 56 வயதுடையவர்களாவர்.

குகை ஒன்றில் தியானம்
பொத்துவில் - முஹுது மகா விகாரையின் காட்டுப் பகுதியில் உள்ள பாறைக் குகை ஒன்றில் தியானம் செய்து கொண்டிருந்தபோதே தேரரிடமிருந்து 57,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்ட கைத்தொலைபேசி மற்றும் பணத்தை கைப்பற்றிய பொத்துவில் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri