ஹொரணையில் பல்பொருள் அங்காடியில் திருட்டு
ஹொரணை - பாணந்துறை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் திருட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த பல்பொருள் அங்காடியில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் மற்றும் பால்மா பாக்கெட்டுகளே திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சந்தேகநபர் கடையின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக பல்பொருள் அங்காடியில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில் சந்தேகநபர் கடைக்குள் நுழைந்து பொருட்களை திருடுவது அங்கிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.