வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள்! குடும்பத்தாருக்கு கொலை அச்சுறுத்தல்(Video)
மட்டக்களப்பு - ஏறாவூர் 05ம் குறிச்சி பகுதியில் நேற்று பட்டப்பகலில் திடீரென வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பெண் குடும்பஸ்தர்களை அச்சுறுத்தி நகைகளைக் கோரியுள்ளனர்.
மோட்டார் வண்டியின் இலக்கங்களை மறைத்து வந்து வீட்டினுள் நுளைந் கும்பல் வாள், கத்தி, தடியுடன் நுழைந்து குடும்பத்தினரை அச்சுறுத்தி நகைகளைக் கோரியுள்ளனர்.
குறித்த வீட்டிற்கு அயலவர்கள் வந்தவேளை குறித்த கும்பல் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இச் சம்பவங்கள் அங்கிருக்கும் சிசிரீவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.