கொழும்பிலுள்ள வீதிகள் இருளில் மூழ்கும்! 15 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு எச்சரிக்கை
கொழும்பிலுள்ள வீதிகள் இருளில் மூழ்கும் நிலை ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன கூறுகையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நிலுவையில் உள்ள 15 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை செலுத்தாமையால், கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
5 மாதங்களாக செலுத்தப்படாத கட்டணங்கள்
கொழும்பு நகரில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் தொடர்பான கட்டணங்கள் சுமார் 5 மாதங்களாக செலுத்தப்படவில்லை.
இத்தொகையை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு பல தடவைகள் அறிவித்தும் மின்சார சபைக்கு இது தொடர்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.
போக்குவரத்து நெரிசல்
இந்நிலைமையினால் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் துண்டிக்கப்பட்டால் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதுடன், கொழும்பிலுள்ள வீதிகள் பல இருளில் மூழ்கும் நிலை ஏற்படும்.
மேலும், பல வீதிகளில் உள்ள மின் விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை அமைப்புகளுக்கான மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
