மீள ஆரம்பிக்கப்படும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் - செய்திகளின் தொகுப்பு
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் தற்போது நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (27.05.2023)இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக மீள ஆரம்பிக்க வேண்டும் என்பதே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோள் என்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |