நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியை பயன்படுத்துவோருக்கான அவசர அறிவித்தல்
வவுனியா, நெளுக்குளம் - செட்டிகுளம் பிரதான வீதியான இன்று (25.11) இரவு 9 மணி தொடக்கம் நாளை (26.11) அதிகாலை 5 மணிவரை மூடப்படும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து உள்ளமையால் இன்று (25.11) இரவு அதன் வான்கதவுகள் மேலும் ஆழத்திற்கு திறக்கப்படவுள்ளது.
இதன்காரணமக நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் நீர்வரத்து அதிகரித்து வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்படும்.
இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த வீதியானது இரவு 9 மணியில் இருந்து நாளை அதிகாலை 5 மணிவரை மூடப்பட்டிருக்கும்.
எனவே பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 12 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
