நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியை பயன்படுத்துவோருக்கான அவசர அறிவித்தல்
வவுனியா, நெளுக்குளம் - செட்டிகுளம் பிரதான வீதியான இன்று (25.11) இரவு 9 மணி தொடக்கம் நாளை (26.11) அதிகாலை 5 மணிவரை மூடப்படும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து உள்ளமையால் இன்று (25.11) இரவு அதன் வான்கதவுகள் மேலும் ஆழத்திற்கு திறக்கப்படவுள்ளது.
இதன்காரணமக நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் நீர்வரத்து அதிகரித்து வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்படும்.
இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த வீதியானது இரவு 9 மணியில் இருந்து நாளை அதிகாலை 5 மணிவரை மூடப்பட்டிருக்கும்.
எனவே பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam