வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்றவர்கள் விபத்துக்குள்ளான நிலையில் படுகாயம் அடைந்துள்ளனர்.
புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் இன்று விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்து மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூவர் காயம்
மதுரங்குளியில் இருந்து விமான நிலையம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று பஸ்ஸின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி - ஹிதாயத் பகுதியை சேர்ந்தவர்களே விபத்தில் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
கட்டாரில் வேலைவாய்ப்புக்காக சென்றவரை வழி அனுப்புவதற்காக சென்ற வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவரும் படுகாயமடைந்து முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் , மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தினால் தனியார் பயணிகள் பஸ்ஸின் பின் பக்கமாக சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
