திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயம்
திருகோணமலை பகுதியில் சிவனொளிபாத மலைக்குச் சென்று வீடு திரும்பிய வாகனம் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த விபத்து கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 93 ம் கட்டைப் பகுதியில் இன்று (11.2.2024) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் தொலை தொடர்பு கம்பம் ஒன்றிலே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், விபத்துக்குள்ளான வாகனம் சிவனொளிபாத மலைக்கு சென்று வீடு திரும்பி போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காயங்களுக்குள்ளானோர் கந்தளாய் 94 ம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri