முல்லைத்தீவில் கோர விபத்து: ஒருவர் மரணம் (Photos)
முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (26.06.2023) இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மல்லாவி திருநகர் பகுதியில் ஏற்கனவே இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அன்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரும் மற்றுமொருவரும் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பட்டாரக வாகனம் ஒன்றில் வந்தவர்களால் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பின் தொடர்நதுள்னர்.
குறித்த மோட்டார் சைக்கிள் மல்லாவியில் இருந்து துணுக்காய் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது எதிரே வந்த கப் ரக வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் வாகனத்தின் ஒரு பகுதியும் தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கையொப்பமிடுவதற்காக வந்திருந்த குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மற்றும் தடையவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவமானது விபத்தா? அல்லது திட்டமிடப்பட்ட கொலை சம்பவமா? என பல்வேறு கோணங்களில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri
