கிளிநொச்சியில் வீதி விபத்து: யாழ். நபர் உயிரிழப்பு
கிளிநொச்சி - முகமாலை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்றைய தினம் (24.05.2023) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் - துன்னலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இரு சிறுவர்கள் படுகாயம்
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |