ஹிஷாலினி உயிரிழப்பு விவகாரம் - ரிஷாத்திற்கு இன்று வழங்கப்பட்டுள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரிஷாத் வீட்டில் பணியாற்றி வந்த ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்திலேயே ரிஷாத் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவத்தில் ஐந்தாவது சந்தேகநபராக ரிஷாத் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
ஹிஷாலினி தொடர்பில் இரண்டாவது பிரேத பரிசோதனையிலும் உறுதியான விடயம் - முழு விபரம் வெளியானது
ஹிஷாலினி வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டார் ரிஷாத் - மனைவி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட உத்தரவு

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
