கடந்த 6 மாதங்களில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புக்கள்
கடந்த 6 மாதங்களில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மனச்சோர்வு, முதுமை, மனநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு உளவியல் அல்லது நரம்பியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸால் மருத்துவமனையில் அல்லது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் அதிக ஆபத்து ஏற்பட்டுள்ளது. மன அழுத்தத்தின் விளைவுகள், மூளைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த ஆராய்ச்சிக்காக இங்கிலாந்தில் உள்ள விஞ்ஞானிகள் அமெரிக்காவில் அரை மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளின் மின்னணு மருத்துவ பதிவுகளை பெற்றுள்ளனர்.
ஆராய்ச்சியின்படி கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் கவலை மற்றும் மனநிலைக் கோளாறுகள் என்பது பொதுவான அம்சங்களாக உள்ளன.
அத்துடன் நோய்வாய்ப்பட்ட அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.
இதேவேளை கோவிட் தொற்றுக்கும் மறதி நோயான பார்க்கின்ஸனுக்கும் தொடர்புகள் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.